சொற்கள் நிரம்பி வழியும் குடுவை
கொடுங்கோடைச் சொற்களால்
இகல் பாராட்டிச்
சுட்டெரிக்கும் மனிதர்கள்
பாளம் பாளமாய் வெடிக்கிறது மனது
மனம் போன திசையில் பயணிக்க
பெரு மழையுடன்
இருண்ட காண்டாவனம்
ஓராயிரம் நெருப்பெறும்புகள்
மொய்த்திருந்து
தின்னுகின்றன மனதை
வலியால் துடிதுடிக்க
ஆர்ப்பரித்தெழுகின்றன
கொடிய நினைவுகள்
அவற்றின் பிடியிலிருந்து
லாவகமாகத் தப்பியோடிக்
கண்டெடுக்கிறேன்
நீ கொடுத்த சொற்களின் குடுவையை
திக்கொன்றாய் அவிழ்த்துக்
கொட்டுகின்றேன்
வழி நெடுக அர்த்தங்கள்.
~ ப்ரியா பாஸ்கரன்.

