
அழகான பௌர்ணமி
நாளொன்றில் தங்கத் தாரகையாய்
மின்னும் நிலவின் ஒளியில்
நர்த்தனமாடும் நட்சத்திரங்களுக்கு
சங்கீதச் சாரல்கள் தெளித்து
சுருதி தப்பாமல்
தாள இலயம் இட்டுக்கொண்டிருந்தது.
கரைகாணாத
காதலுடன் கால் நனைக்க
வெண்திரை சரங்கள்
வேகமாய்த் தீண்டி
நொடியில் பட்டென
கடலுக்குள் போன பரிசத்தில்
உணர்வுகள் அலையென எழவே
கரையோரமாய் நடைபோட்டு
தேர்போல் மெல்ல அசைந்தாடியது
பிரம்மன் வடித்த சிலையொன்று.
~பிரியமுடன் பிரியா 💕









