
போதை மருந்து…
கனவுகளில் மிதக்கவைக்கும்
கானல்நீரை துரத்தவைக்கும்
கற்பை விலைபேசவைக்கும்
கதறித் துடிக்கவைக்கும்
புத்திசாலியை அறிவிலியாக்கும்
புன்னகையைத் தொலைக்கவைக்கும்
புகழை அபகரிக்கும்
போதைக்கு அடிமையாக்கும்
தன்னையே மறக்கடிக்கும்
தடுமாறி விழவைக்கும்
தன்மானம் இழக்கவைக்கும்
தன்னைச்சார்ந்தவர்களைத் துன்புறுத்தவைக்கும்
இளைஞரைக் குறிவைக்கும்
இருட்டைப் பிடிக்கவைக்கும்
இச்சையை அதிகரிக்கும்
இன்னலில்லையென நம்பவைக்கும்
விடத்தை விழுங்கிடவைக்கும்
விளையாட மறக்கவைக்கும்
வீட்டினுள் முடங்கவைக்கும்
வீதியில் நிற்கவைக்கும்
பெற்றோரைத் தள்ளிவைக்கும்
பணத்தைத் திருடவைக்கும்
பிஞ்சிலேப் பழுக்கவைக்கும்
பயத்தைத் தக்கவைக்கும்
குழிபறித்துத் தள்ளவைக்கும்
குப்பையில் உழலவைக்கும்
குருதியில் ஊறவைக்கும்
கூனிகுருகி நிற்கவைக்கும்
உண்மையைப் பொய்யாக்கும்
உணர்வினை மழுங்கடிக்கும்
உறவுகளை எதிரியாக்கும்
உயிரை மெல்லக்குடிக்கும்
காத்திருப்பை ஏற்கமறுக்கும்
காண்போரை முகம்சுழிக்கவைக்கும்
காலனைச்சடுதியில் வரவைக்கும்
கண்ணீரஞ்சலி ஒட்டவைக்கும்…!
~பிரியமுடன் பிரியா









