
விழியின் முறைப்பு கூட
காதல் மொழி பேசுதடா
உதட்டு சிரிப்பு கூட
கள்ளுண்ட போதை அளிக்குதடா
மீசை முறுக்கின் மீது
மீளாத ஆசையடா
புருவ ஏற்றத்தில்
புத்தி பேதலித்ததடா
சுவாச கதகதப்பில்
குளிர் போக்கும் போர்வையானாயடா
தடுமாறி விழும்பொழுது
கைத்தடியாய் மாறினாயடா
நெஞ்சமதில் தஞ்சம் கொள்ள
நாடி நரம்பெல்லாம் துடிக்குதடா
தோள் வளைவில் துயில் கொள்ள
மனம் தோகை விரித்தாடுதடா
மயக்கும் வார்த்தை கேட்டு
உள்ளம் பித்தானதடா
மங்கையிவள் மனமறிந்து
மலர்ப்பாதை அளித்தவனடா
கையணப்பில் கட்டுண்டு
காலமெல்லாம் வாழ்திடுவேனடா
கண்விழி பார்த்து
கைகோர்த்து வீதியுலா செல்வோமடா
~பிரியமுடன் பிரியா 💕









