
பட்டம் பெற்றவுடன் நல்ல உத்தியோகம் கிடைக்க
பணம் நிறைய சம்பாதித்து
பட்டணத்தில் பெரிய தனிய வீடு கட்டி
பள பளவென நான்கு சக்கர ஊர்தி வாங்கி
படித்த பாவையை மணந்து
அடுத்து அயல் நாட்டில் குடியேறி
பிள்ளையயும் அங்கேயே பிறந்திட
பிறகு குடியுரிமையும் பெற்று
பாட்டன் பாட்டி அவ்வப்பொழுது வந்து போக
பேரப்பிள்ளையும் தமிழ் கற்க முயல
பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க தடுமாறுகிறார்கள்..
மொழி விட்டுப் போனால்
என்னென்ன பிரச்சனைகள்
நம் கண்மணிகள் சந்திக்கும்..
மொழி விட்டுப் போனால்
உறவுகள் விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
கலை விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
பண்பாடு விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
மரபு விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
அரும்பெரும் நூல்கள் படிக்கும்
வாய்ப்பு விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
அறிவு வளர்ச்சி விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
நாட்டுப் பற்று விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
பலதரப் பட்ட மக்களை இணைக்கும்
நல்லுறவு விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
துல்லியமான ஆழமான கருத்துகளை
பகிர முடியாமல் போகும்..
மொழி விட்டுப் போனால்
புரிந்து கொள்ளும் திறன் குறைந்து போகும்..
மொழி விட்டுப் போனால்
திருகுறள் போன்ற வாழ்வியல் நிறைந்த
இலக்கியத்தின் பரிச்சயம் விட்டுப் போகும்..
மொழி விட்டுப் போனால்
பல்லாயிரம் ஆண்டு தொன்மை மொழியான தாய் தமிழ் மொழியுடனான
பாரம்பரியம் பாசம் பந்தம் அனைத்தும்
விட்டுப் போகும்..
நம் கண்மணிகளை விட்டு..
இவை அனைத்தயும்
நம் குழந்தைகளுக்கு
தமிழ் கல்வி
மூலம் புகுத்த..
பார் போற்றும் தமிழ் சங்கம் நடத்தும்
பல தன்னார்வத் தொண்டாற்றும் ஆசிரியர்கள்
பனியாற்றும் தமிழ்ப் பள்ளியில்
பிள்ளைகளுக்கு
முத்து முத்தாக எழுத
தமிழ் எழுத்தறிவு
பல நூல் கல் – நூலகம்
வைத்து பிஞ்சுகளுக்கு
படிக்கும் பழக்கத்தை
வழக்கமாகி படித்த திறனை
வெளிப்படுத்த..
வாரந்தோறும் நடக்கும்
இறைவணக்கத்தில்
பல பேர் முன்னிலையில்
குறள் சொல்ல மொட்டுகளை
ஊற்சாகமூட்ட மலர் அரும்புகள்
குறள்களை கொட்ட
மலர்கள் மொட்டவிழ்ந்து மணம் பரப்பி
மலர்களின் வாசனை(தன்னம்பிக்கை)
நிறையும்..
அது மட்டுமா?
கதைச் சொல்ல
கதைப் படிக்க
கதை எழுத
ஊக்குவிக்கும்
கதைச் சுரபி
பாட்டுப் பாட
நாடகம் நடிக்க
நடனம் ஆட
பேச்சு திறனை வளர்க்க
என பல கலைகள் கற்றுவித்து
கற்றதை கலை நிகழ்ச்சி
ஆண்டு விழா மூலம்
கண்கொள்ளா காட்சியாக
சிட்டுக் குருவிகளை வானில்
சிறகடிக்கச் செய்ய
பெற்றவர்கள் சிலையாய்
மெய் மறந்து மயிர் கூச்செரிந்து அமர்ந்திட..
குழந்தைகளையும் பெற்றோர்களையும்
சிலிர்க்க வைத்தும் சிந்திக்க வைத்தும்
அயல் நாட்டில் அனைவரையும்
ஓர் இடத்தில் எவ்வித வேற்றுமையின்றி
ஒருங்கிணைத்து
பண்பாடு ஒற்றுமை நிலை நிறுத்த
தாய்த்தமிழ் மொழியால்
மட்டுமே சாத்தியம்!!
அது மட்டுமல்ல
பெரியோர்களுக்கு
இலக்கண இலக்கியம்
கற்க வாய்ப்பு
குழந்தைகள் தமிழ் கல்வி
கற்கும் காலத்தில் பள்ளியில்
காத்திருக்கும் பெற்றோருக்கு
உடல் நலம் பேணும்
யோகம் பயில வாய்ப்பு..
இதை சாத்தியமாக்க
பெறும் உதவி புரியும் சாதனையாளர்களான
தன்னலமற்ற ஆசிரியர் பெருமக்கள்
அனைவருக்கும்
பாராட்டுகளையும்
பல நன்றிகளையும்
உரித்தாக்குவோமாக!!
அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!
-பிரியா பாஸ்கரன் 🙏🏾🙏🏾🙏🏾