
பணம் இருந்த போது..
பழகினாய் பத்து மாம்..
வீசினாய் காதல் பூ வாசம்..
பூர்வ ஜென்ம பந்த பாசம்..
நீயே உயிர் சுவாசம்..
போகலாம் காதல் தேசம்.. என்றாய்!
பணம் இழந்த போது..
நீ வைத்த நேசம்..
எல்லாம் வெளி வேசம்..
செய்தாய் மோசம்..
பறந்து போனாய் வெளி தேசம்.. புரிந்தது!
கலங்கினான்(ள்)..
விழலுக்கு போனது பாசம்..
காற்றில் கரைந்தது நேசம்..
ஆதலால் ஆயாசம்..
வந்தது இச்சாநாசம்(விரக்தி)..
பெற்றோரை விட்டுச் சென்றான்(ள்) பரதேசம்..
கலங்காதே மகனே(ளே)..
பெற்றோர் உபதேசம்..
அழிந்தது விநாசம்(தீமை)..
வந்துவிடு சுதேசம்..
மகிழம் பூ வாசம்..
வரும் உன் வசம்..
கண்ணாட்டி(ளன்) பாசம்..
உருவாக்கும் நேசம்..
சேரும் உன் சுவாசம்..
வாழ்வில் வசந்தம் வீசும்!!
-பிரியா பாஸ்கரன் 💞









