தந்தை!

வயிற்றில் சுமக்காமல்
மார்பில் சுமந்து..
நடை பயில்கையில்
தடுத்து வீழ்ந்தால்
தானாக காலுன்றி எழ
கற்று கொடுத்து..

கற்கையில்
தளர்ந்து போனால்
தன்னம்பிக்கையூட்டி..
தடம் புரண்டால்
திட்டி விட்டு
தட்டி கொடுத்து..

பணியில்
துவண்டு போனால்
இரவு கழிந்து விடியல்
நிச்சயமென்ற நிதர்சனத்தை
நினையுறுத்தி..
வெற்றி கணிகள்
வெகு தூரத்தில் இல்லை
என்றுணர்த்தி..

வாழ்வில்
கலங்கி போனால்
காத்து நிற்கும்
தெய்வமாய்..

துவண்டு போனால்

தோள் கொடுக்கும்

தோழனாய்..
கண்ணீர் விட்டழுதால்
தாங்கி நிற்கும்
தாயுமானவனே தந்தை!!

-பிரியா பாஸ்கரன் ❤

பணம்!

எட்டப்பனைப் போல

காட்டிக்கொடுக்கும் தான்

இல்லாதபோது!!

நிறம் மாறும் உறவுகளை..

குணம் கெட்ட மனிதர்களை..

கறிவேப்பிலையாய்

பயன்படுத்துபவர்களை..

காசுக்காக வந்த காதலை..

உற்ற தோழர் எவரென்பதை..

உயிராய் இருப்பவர்களை..

உள்ளத்தால் உயர்ந்தவர்களை..

பாசமுள்ள பந்தங்களை..

சேமிப்பின் அத்தியாவசியத்தை..

ஆடம்பரத்தின் அநாவசியத்தை..

நிகழ் காலத்தின் நிதர்சனத்தை..

தன்னம்பிக்கையின் அவசியத்தை..

ஈகையின் சிறப்பை..

மனித நேயத்தின் முக்கியதுவத்தை..

உழைப்பின் உன்னதத்தை!!

-பிரியா பாஸ்கரன்.💰 💴

கண்ணாளனே!

பட்டுக்கு காஞ்சி

பாட்டுக்கு பாரதி

மொட்டுக்கு ரோஜா

மெட்டுக்கு ராஜா

கவிதைக்கு வைரமுத்து

மணத்திற்கு மல்லிகை

கல்விக்கு ஆசான்

அன்புக்கு அன்னை

அரவனைப்புக்கு தந்தை

ஆசைக்கு மகள்

ஆஸ்த்திக்கு மகன்

இவையனைத்துமாய்

இருந்தாய் நீ எனக்கு!!

என் கண்ணாளனே..

என் கணவனே!!

-பிரியா பாஸ்கரன் ❤️

முயற்சி!

கொய்துவிட்டேன் மலர்களை..
கோர்க்கத்தான் நேரமில்லை!

வடித்துவிட்டேன் வரிககளை…
வாசிக்கத்தான் ஆள் இல்லை!

விட்டுவிட்டேன் வார்த்தைகளை…
பொறுக்கத்தான் முடியவில்லை!

இழந்துவிட்டேன் மணித்துளிகளை..
பெறத்தான் இயலவில்லை!

ஒடித்துவிட்டேன் மனச்சிறகுகளை..
பறக்கத்தான் முடியவில்லை!

ஒழித்துவிட்டேன்
இயலாமையை…
அழித்துவிட்டேன்
ஆத்திரத்தை…

உணர்ந்துவிட்டேன்
காலத்தின் அருமையை…
வளர்துக்கொண்டேன் தன்னம்பிக்கையை…

முடிவில் ஜெயித்துவிட்டேன்!!
முயன்றால் முடியாதது
உண்டோ?

-பிரியா பாஸ்கரன் 🎉

மகவு!

தீராத தாகம்..
தீர்ந்த்து!
கேட்காத ராகம்.
கேட்டது!
மீட்டாத வீணை..
மீட்டது!
துள்ளாத மான்..
துள்ளியது!
கூவாத குயில்..
கூவியது!
ஆடாத மயில்..
ஆடியது!
மனம் ஆனந்தக்
கூத்தாடியது….

மலடி சொல்லை அழித்து
மறுமலர்ச்சி அளித்த
மகவை ஈன்ற பொழுது!!

– பிரியா பாஸ்கரன் 👶🏻❤

ஓர் இரவு!

சல சல மழை
பிடி பிடி குடை!!
கிடு கிடு பள்ளம்
மட மட வெள்ளம்!!

நெடு நெடு கால்கள்
விடு விடு நடை!!
விசு விசு குளிர்
வெட வெட உடல்!!

லொட லொட சத்தம்
லப லப இதயம்!!
பட பட நெஞ்சம்
பளீர் பளீர் மின்னல்!!

குசு குசு பேச்சு
கட கட சிரிப்பு!!
திடு திடு நுழைந்தான்
திருட்டு கள்வன்!!

தக தக கண்கள்
துறு துறு கைகள்!!
தர தர இழுத்து
சத சத சேற்றில்!!

கும் கும் குத்தி
குபு குபு குருதி…!!
வெடு வெடு நடுங்கி
எடு எடு ஓட்டம்…..

நிமிர்ந்து நின்றாள்!!
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய்!!!

-பிரியா பாஸ்கரன் 🥋

ஆடி மாதம்!

சுட சுட இட்லி
சூடான சாம்பார்!
கம கம காபி
காரமான மிச்சர்!

பட பட நெஞ்சம்
பட்டான மஞ்சம்!
சிலு சிலு காற்று
சிறப்பான உறக்கம்!

எதுவும்
சுவையில்லை!
சுகமில்லை!
நீ…
ஆடி மாதத்தில்
அம்மா வீட்டில்
உள்ளதால்…!!

-பிரியா பாஸ்கரன் ❤

கணவனின் பிரசவ வலி!

உறங்காத கண்கள்..
நொடிக்காத இமைகள்.
ஓயாத கால்கள்..
பார்க்காத ஒளிகள்..
விளங்காத மொழிகள்..
பேசாத சொற்க்கள்..
உணராத உணர்வுகள்..

உணர்ந்து..
மகிழ்ந்து..
புரிந்து..
பார்த்து..
ஓய்ந்து..
நொடித்து..
உறங்கியது..!

தாயும் சேயும்
நலம் என்றவுடன்!

-பிரியா பாஸ்கரன் ❤💐

தமிழ் மொழி!

மலடாகிப் போனேன்

மகன் விட்டுச் சென்றபோது!!

ஊமையாகிப் போனேன்

உறவுகள் விட்டுச் சென்றபோது!!

சவமாகிப் போனேன் – நீ

தமிழை விட்டுச் சென்றபோது!!

-பிரியா பாஸ்கரன் 📖 📚

கைப்பேசி!

அண்ணனும் நோக்கினான்…

அவளும் நோக்கினாள்…

இழுத்தது காந்தமாய்!

அண்ணனும் நோக்கினான்…

அவளும் நோக்கினாள்…

நோக்கியது என்னவோ…?

நோக்கியா பேசியை!!

-பிரியா பாஸ்கரன் 📲