
பொதிகை தமிழ் அறக்கட்டளை மற்றும் ழகரம் வெளியீடு இணைந்து நடத்தும் இணைய வழிப்பன்னாட்டுக் கவியரங்கத்தில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கவிஞர் பேரா மற்றும் அவருடன் இணைந்து ஒருங்கிணைக்கும் அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள். மற்றும் என்னுடன் பங்கேற்கும் சக கவிஞர்களுக்கும், நேரலையில் கண்டு களிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.
எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு
**பாரதியின் உள்ளொளி… நையப் புடை..**
அகிலத்தில் பாலியல் கொடுமையைத் தடுத்திடஅனலிலிட்ட புழுவெனத் துடிக்கப் பாவிகளை நையப் புடைத்திடு
வலியோரை எதிர்த்து வீர முழக்கமிடவீறுகொண்டு எழுந்து அச்சம்தனை நையப் புடைத்திடு
யார் கொடுத்தார் உரிமை அதனைத் தட்டிப் பறிக்க எனக் கேட்டிட
யாவரும் சமமே என்றுரைத்துத் தாழ்வு மனப்பான்மையை நையப் புடைத்திடு
மனித நேயம் போற்றிக் காத்திடமக்களிடையே நிலவும் சாதியை நையப் புடைத்திடு
நாட்டில் அமைதி நிலைத்து நின்றிடநாசக்காரரின் வன்முறையை நையப் புடைத்திடு
புகழ் போதையிருந்து மனம் தெளிந்திட
பொறாமை குணத்தினை நையப் புடைத்திடு
விரலிடுக்கில் நழுவும் வாகையை அடைந்திட
விரைந்து செயலாற்றி தோல்வியை நையப் புடைத்திடு
ஆணவம் கொண்டு ஆடிடும் மனதை அடக்கி வைத்திட அகத்திலிருக்கும் அகங்காரத்தை நையப் புடைத்திடு
சிந்தனை மேம்பட்டுச் சிறப்புடன் வாழ்ந்திட
சாத்தானாயிருக்கும் சோர்வை நையப் புடைத்திடு
உழைப்பைப் போற்றி உள்ளம் மகிழ்ந்து வாழ்ந்திடஉடும்பாய்ப் பற்றும் சோம்பேறித் தனத்தை நையப் புடைத்திடு
சாதிக்கப் பிறந்தோர் என்றதனை மனதில் விதைத்திட
சான்றோனாவதைத் தடுக்கும் அறியாமையை நையப் புடைத்திடு
செய்யும் செயலில் நேர்மை வெளிப்பட
சாகசம் புரியும் வஞ்சம்தனை நையப் புடைத்திடு
நல்வழியில் நின்று அறம் புரிந்திடநீதியைக் குலைக்கும் மன மாசுதனை நையப் புடைத்திடு
பெண்ணாய்ப் பிறந்தமைக்கு பெருமை கொண்டிட
பெண்ணியத்தை இகழும் எவ்வினத்தையும் நையப் புடைத்திடு
பார் போற்றும் புதுமைப் பெண்ணாய் சிறந்து விளங்கிடபாட்டன் பாரதி சொன்ன அடிமைத்தனத்தை நையப் புடைத்திடு நையப் புடைத்திடு..!
இந்த அறிய வாய்ப்பை அளித்த அனைவருக்கும்என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
~பிரியா பாஸ்கரன்







